ஊரடங்கை மீறியதாக 60 வாகனங்கள் பறிமுதல்!

சென்னையில் ஞாயிறு முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், வாகன சோதனைகள் குறித்து அமைந்தகரையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் 7 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறினார்.

கொரோனா தொற்றால் 13 காவலர்கள் உயிரிழந்ததாகவும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, அண்ணா பல்கலைகழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் வாக்கு எண்ணிக்கை தினந்தன்று சென்னையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version