நெல்லையில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லையை அடுத்த பேட்டையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய பாளையம் பகுதியை சேர்ந்த ஆரோக்யராஜ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Exit mobile version