திருவேங்கடம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலி

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள வரகனூர் எனுமிடத்தில் குணா என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. தொழிலாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறின.தொழிலாளர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

முதற்கட்ட தகவலில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.மேலும் அருகில் உள்ள பல கட்டடங்களுக்கு தீ பரவி பட்டாசுகள் வெடிக்க தொடங்கின.சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் குறித்த விவரம் முழுமையாக தெரிய வில்லை. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version