கேரளா உள்ள மூணாறில் சுற்றுலா விடுதி ஊழியர்கள் 6 பேர், கொரானோ வைரஸ் அறிகுறி

கேரளா மாநிலம் மூணாறில் உள்ள டீ கவுண்டி சுற்றுலா விடுதி ஊழியர்கள் 6 பேர், கொரானோ வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூணாறில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நபர் டீ கவுண்டி சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்தபோது பணியில் இருந்த விடுதியின் 77 பேர் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், இவர்களில் 6 பேருக்கு காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டதை அடுத்து, 6 பேரும் சித்திரபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அடிமலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா விடுதியின் அருகில் உள்ள இடங்களில் மருத்துவக்குழுவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருவதால், கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

Exit mobile version