குமுளியில் பிரேசில் நாட்டு பணத்துடன் சிக்கிய 6 பேர்

தமிழக – கேரள எல்லையான குமுளியில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பிரேசில் நாட்டு பணத்துடன் சிக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா தலமான தேக்கடி, பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது விடுமுறை காலம் என்பதால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், குமுளி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 கார்களில் வந்த 6 பேரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது மூன்றரை கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான பிரேசில் நாட்டு பணத்தை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பைசல் மைதீன்குட்டி, அப்துல் ஹக், பாகிம் கபூர், ரியாஸ், அஷ்ரப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version