மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 6 பேர் கைது

மயிலாடுதுறை அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட6 பேரைக் கைது செய்த காவல்துறையினர் மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறையை அடுத்த முடிகண்டநல்லூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு மணல் குவாரியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் மணல் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். பின் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version