வி.வி.பேட் குறித்து தவறாக கருத்து கூறுபவர்களுக்கு 6 மாத சிறை

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி.பேட் இயந்திரம் பற்றி தவறான கருத்து கூறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, வி.வி.பேட் இயந்திரம் குறித்து தவறாக கருத்து கூறுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும், விவி பேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version