உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை -சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்தநிலையில், அனுமதிக்கப் பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும், மேலும், இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version