தூத்துக்குடி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 6 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மே 19 ஆம் தேதி சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொகுதிகள் உள்ள மாவட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரில் நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் பிரட்வின் என்பவர் 6 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை தூத்துக்குடி தாலுக்கா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Exit mobile version