தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து… 6 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் ஷம்சாபாத் அருகே கூலித் தொழிலாளர்கள் 30 பேரை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதும் நிலை ஏற்பட்டது. இந்த விபத்தை தவிர்ப்பதற்காக, ஓட்டுநர் சட்டென்று பிரேக் அடித்தததால், சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரும் சேதமடைந்த நிலையில், லாரியில் பயணம் செய்த ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த 15 தொழிலாளர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். காரும், லாரியும் அதிவேகத்தில் சென்றதால் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version