கடையின் மேல் தளத்தில் சிக்கிய 6 பேர் பத்திரமாக மீட்பு

6 people trapped on the upper floor of the shop were rescued safely

ஹைதராபாத் அருகில் உள்ள, செகந்திராபாத் நல்ல குட்டா பகுதியில், விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் திடீரென பிடித்த தீ, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பின், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். தீ விபத்தின் போது கடையின் மேல் தளத்தில் சிக்கி கொண்டிருந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Exit mobile version