தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை காவல் ஆணையராக இருந்த பாஸ்கரன் சென்னை செயல்பாட்டுப் பிரிவின் ஐ.ஜியாகவும், நெல்லை மாநகரின் புதிய காவல் ஆணையராக தீபக் தோமரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மாநகர குற்றவியல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக ரங்கராஜனும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திஷா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கயல்விழி உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல் படைபிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 6 ஐபிஎஸ் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Exit mobile version