வீட்டில் கஞ்சா விற்பனை செய்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது!!!

வாணியம்பாடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக வாணியம்பாடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதி தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மகேஷ்வரி என்பவரின் வீட்டில் சோதனை செய்ததில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், 20 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக, 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version