அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க, 596 மாடுபிடி வீரர்கள் பதிவு

அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க, 596க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறினார். போட்டி நடைபெறும் இடத்தில், அசம்பாவிதங்களை தவிர்க்க மருத்துவக் குழுவினரும், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version