தமிழகத்தில் மேலும் 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் ஐந்தாயிரத்து 881 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஐந்தாயிரத்து 881 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

மூவாயிரத்து 492 ஆண்களுக்கும், இரண்டாயிரத்து 389 பெண்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 13 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 99 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மாவட்ட அளவில் அதிகரித்து வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரத்தில் 485 பேருக்கும், திருவள்ளூரில் 373 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் 359 பேரும் , விருதுநகரில் 357 பேரும், செங்கல்பட்டில் 334 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் ஐந்தாயிரத்து 778 பேர் குணமடைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 74 புள்ளி 82 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 57 ஆயிரத்து 968 பேர் உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மூவாயிரத்து 935 ஆக இருக்கிறது.

Exit mobile version