தமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று!!

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 835 பேரில் 3 ஆயிரத்து 549 பேர் ஆண்களும், 2 ஆயிரத்து 286 பேர் பெண்களும் ஆவர்.

தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 58ஆக உயர்ந்துள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 453 பேருக்கும், திருவள்ளூரில் 390 பேருக்கும், கோவையில் 289 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தேனி 286 பேருக்கும், கடலூரில் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோரின் சதவீதம் 81 புள்ளி 61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 53 ஆயிரத்து 499 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version