சீக்கிய குரு குருநானக்கின் 550வது பிறந்த நாள் கொண்டாட்டம் கோலாகலம்

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்கின் 550ஆவது பிறந்த நாள் விழாவையொட்டிச் சீக்கியர்கள் சிறப்பு வழிபாடு நடத்திக் கொண்டாடி வருகின்றனர்.

சீக்கிய மதத்தின் நிறுவனரும் சீக்கியர்களின் முதல் குருவுமான குருநானக்கின் 550ஆவது பிறந்த நாள் விழா உலகெங்கும் உள்ள சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பஞ்சாபின் கபூர்தலா மாவட்டத்தில் சுல்தான்பூர் லோடியில் உள்ள குருத்துவாராவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிச் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, அவரது மனைவியுடன் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

மேலும் டெல்லியில் உள்ள பங்களாசாகிப் குருத்துவாராவுக்குச் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் குருத்துவாரா நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். சிறப்பு வழிபாடு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் சீக்கிய மக்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். 

Exit mobile version