சிறுமி கர்ப்பம்.. 55 வயது காமுகன் கைது!! அதிர்ச்சியில் ஊர் மக்கள்

கிருஷ்ணகிரி அருகே 17 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 8 மாத கர்ப்பிணியாக்கிய 55 முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஓராண்டாக அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருக்கன்சாவடியை சேர்ந்தவர் உதயண்ணன், 55 வயதான இவர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில் கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் அதே சங்கத்தில் தற்காலிக பணியாளராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் காவேரிப்பட்டணம் அருகே17 வயது சிறுமி ஒருவர் தனது தாய்மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த வாரம் அந்த சிறுமிக்கு வயிறு பெரிதாக இருப்பதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் வயிற்றில் கட்டி இருக்கலாம் என்று கண்டுகொள்ளாமல் விட்டனர். திடீரென்று ஒரு நாள் கடுமையான வயிற்று வலி ஏற்பட, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது கடந்த 10 மாதங்களாக தன்னை 3 பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறினார். குறிப்பாக சிறுமியை மிரட்டி கடந்த ஓராண்டாக 55 வயதான உதயண்ணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதே ஊரைச் சேர்ந்த ராம்ராஜ், சக்தி ஆகிய இரு இளைஞர்களும் அத்துமீறியதால், சிறுமி கர்ப்பம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 55 வயது காமுகன் உதயணனை பிடித்து அப்பகுதி மக்கள் விசாரித்த போது சிறுமியிடம் அத்துமீறியதை ஒப்புக் கொண்டதால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். கூட்டாளி காமுகர்களான சக்தியும், ராம்ராஜும் கைது செய்யப்பட்டனர். துள்ளித் திரிய வேண்டிய வயதில் வயிற்றில் 8 மாத சிசுவை தாங்கி, காப்பகத்தில் கலைந்த கனவுகளுடனும், தொய்ந்த உடலுடனும் காணப்படுகிறார் 15 வயது சிறுமி.

Exit mobile version