பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 53ஆவது நினைவுநாள்

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 53ஆவது நினைவுநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 53ஆவது நினைவுநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில்,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Exit mobile version