சென்னையில் ரயில்மூலம் கடத்தி வரப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல்

ங்களூருவில் இருந்து ரயிலில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ குட்கா, சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் பெரம்பூர், மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து செம்பியம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ரயில் மூலம் குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டு சென்னையில் விநியோகம் செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை பெங்களூரு விரைவு மெயில் ரயிலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து அரக்கோணம் மற்றும் ஆவடியை சேர்ந்த இருவரை செம்பியம் காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Exit mobile version