தேசிய லோக் அதாலத் மூலம் 50,266 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் மூலம் 50 ஆயிரத்து 266வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் மொத்தம் 521 அமர்வுகளில், நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 817 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 71 ஆயிரத்து 401 வழக்குகளும் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் 397 கோடியே 60 லட்சத்து 59 ஆயிரத்து 218 ரூபாய் மதிப்பிலான 50 ஆயிரத்து 266 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version