அதிமுக வென்றால் 5000 வீடுகள் கிடைக்கும் : ஏ.சி.சண்முகம்

திமுக வென்றால் 50 வீடுகள் மட்டுமே கிடைக்கும், அதிமுக வென்றால் 5000 வீடுகள் கிடைக்கும் என்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், மத்திய அரசு 2 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில், திமுக வெற்றி பெற்றால், அத்திட்டதின் கீழ் 50 வீடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் பெற முடியும் என்றும், ஆனால், தான் வெற்றி பெற்றால் வேலூர் மாவட்டத்தில், தொகுதிக்கு 5000 வீடுகள் வீதம், 30 ஆயிரம் வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க முடியும் என்று உறுதி அளித்தார். 100 நாள் வேலையை 150 நாட்களாக நீட்டித்து தர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version