திருவேற்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சென்னை திருவேற்காடு அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

திருவேற்காடு அருகேயுள்ள சுந்தரசோழபுரம் பகுதியில், தடை செய்யப்பட்ட குட்கா அதிகளவில் விற்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமாக குடோன் ஒன்றில் சோதனை நடத்திய போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து குடோனின் உரிமையாளர் வீரமணியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version