மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு!

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்க கோரிய வழக்கில், மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி, அஇஅதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் முடிவெடுக்க வேண்டும் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து 3 மாதங்களில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியுமா என் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Exit mobile version