ஈரான் ராணுவ தளபதி இறுதி ஊர்வலத்தில் 50 பேர் பலி

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வல நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இறுதி சடங்குகள் நடந்தன. அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version