50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வரும் காலத்தில் 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 வகையான இனிப்புகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், இதுவரை இல்லாத அளவிற்கு 36 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்துள்ளதாக கூறியுள்ளார். பாமரர் முதல் பணக்காரர் வரை ஆவின் பாலை பயன்படுத்துவதாகவும், தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலத்திலும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், சீனாவிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார். உலக நாடுகளில் ஆவின் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version