கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றிய காவல் துறையினர் கடத்தல் லாரியை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை கேரளாவிற்கு கடத்தப்படுவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நிரோடி – கொல்லங்கோடு பகுதியில் வாகன சோதனை ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த கண்டையினர் லாரியை நிறுத்த முயன்றனர். அப்போது லாரியை நிறுத்தாமல் சற்று தூரம் சென்று லாரியை நிறுத்திய நிலையில், ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து லாரியை கைப்பற்றிய போலீசார் கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Exit mobile version