கும்பகோணத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

கும்பகோணத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 5 டன் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சில நாட்களாகவே பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து வந்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரிபேக், பிளாஸ்டிக் டீ கப், போன்றவைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்த நிலையில், அதிகாரிகள் பிளாஸ்டி விற்பனை செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இங்குள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 5 டன் அளவு பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர். மேலும் இங்கு இயங்கி வந்த பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Exit mobile version