5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – நாளை வாக்கு எண்ணிக்கை

 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்ததேர்தல் முடிவுகள், மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்ப்புடன் உள்ளது. இதையொட்டி, 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version