அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக – பா.ஜ.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரௌன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொகுதி பங்கீட்டுக்குழு உறுப்பினர் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதிமுக தலைவர்களுடன், மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், பா.ஜ.க. தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுக – பா.ஜ.க. இடையே தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version