தீபாவளியையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் – தமிழக அரசு அனுமதி

தமிழக திரையரங்குகளில் தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களின்போது 5 காட்சிகளும், மற்ற நாட்களில் 4 காட்சிகளும் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், 7, 8, 9 மற்றும் 12-ம் தேதி அன்று கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, தீபாவளிக்கு மறுநாளில் இருந்து அதாவது 7,8,9 மற்றும் 12-ம் தேதி ஆகிய நாட்களில் 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளன.

 

Exit mobile version