மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதை முன்னிட்டு, சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு படி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழக அரசின் மாவட்ட கூடுதல் தலைமை இயக்குனர், அபய்குமார் சிங் தலைமையில் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விமான நிலையம், இரயில் நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் காவல்படையினரால் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3 கண்காணிப்பு குழுக்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version