பிரகாஷ்ராஜ் மீதான ரூ. 5 கோடி காசோலை மோசடி வழக்கு: ஆஜராக சம்மன்

திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான 5 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில், ஏப்ரல் 2ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

தமிழில் பிரகாஷ்ராஜ் நடித்து இயக்கிய படம், உன் சமையல் அறையில். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டார். அதன் படி ஹிந்தியில் தடிகா என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார். இந்த படத்தை தயாரிப்பதற்காக, தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் இருந்து கடனாக பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில், வாங்கிய பணத்தை முறையாக திரும்ப அளிக்கவில்லை என்று கூறி, 5 கோடி ரூபாய் அளவிற்கு காசோலை மோசடி செய்ததாக பிரகாஷ் ராஜ் மீது அந்நிறுவனம் புகார் அளித்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் பிரகாஷ்ராஜ் ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராகுமாறு, சைதாப்பேட்டை மூன்றாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Exit mobile version