தறிகெட்டு ஓடிய லாரியால் 5 கார்கள் சேதம்

சென்னை கிண்டி அருகே சாலையில் தறிகெட்டு ஓடிய லாரியால், 5 கார்கள் சேதம் அடைந்தன.

அண்ணா சாலையில், சிமெண்ட் கலவை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியது. அந்த வழியாக சென்று கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட கார்கள் மீது லாரி மோதியது. இதனால், சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு கார்கள் இழுத்து செல்லப்பட்டதால், அவற்றின் டயர்கள் கழன்று ஓடின. இந்த விபத்தில் 5 கார்களும் சேதமடைந்தன. திடீரென பிரேக் பிடிக்காததால் லாரி கட்டுப்பாட்டை இழந்ததாக ஓட்டுனர் தெரிவித்தார். இந்த விபத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேதமடைந்த கார்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Exit mobile version