ஈரோட்டில் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்ற தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது

ஈரோட்டில் சிவனும் சக்தியும் என்று கூறிக்கொண்டு பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ராமலிங்கத்திற்கு ரஞ்சிதா- இந்துமதி என்று இரண்டு மனைவிகள்.

முதல் மனைவி ரஞ்சிதாவிற்கு தீபக், கிஷாந்த் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், 2 வது மனைவி இந்துமதியின் தோழி சசி என்ற தனலட்சுமியும், முதல் மனைவி ரஞ்சிதாவும் சிவனும் சக்தியும் போல் இருப்பதாக கூறி ராமலிங்கம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து குழந்தைகளையும் கொடுமைப்படுத்தி வந்து உள்ளார்.

அதீத கடவுள் நம்பிக்கையால் குழந்தைகளை நரபலி கொடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதனை அறிந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறி தாத்தா வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிவிக்ககூடாது என்று ரஞ்சிதா தனது தந்தை மற்றும் உறவினர்களுக்கு தொடந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிகளான ரஞ்சிதா மற்றும் இந்துமதி அவரது தோழி தனலட்சுமி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மாரியப்பன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Exit mobile version