4ம் கட்ட வாக்குப்பதிவு- வரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்

மக்களவை தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், அமிதாப் பச்சன், அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

மும்பையில் உள்ள ஜி.டி.சோமானி வாக்குச்சாவடியில் பிரபல தொழில் அதிபரான அனில் அம்பானி தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்திகாந்த தாஸ் ஆகியோர் மும்பையில் வாக்களித்தனர். இதனிடையே மத்திய பிரதேச முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் சிந்த்வாராவில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நடிகர் ஆமீர் கான், ஆகியோரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்தநிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிசேக் பச்சன், மருமருகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் ஒன்றாக சென்று வாக்களித்தனர். இதேபோல் கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

Exit mobile version