4வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலிய அணிக்கு 359 ரன்கள் இலக்கு

மொஹாலியில் நடைபெற்று வரும் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், எதிர்பார்த்தது போல ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா – தவான் ஜோடி இந்திய அணிக்கு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தவான் சிறப்பாக ஆடி தனது 16 சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது.

Exit mobile version