இந்தியாவில் ஒரேநாளில் 49,931 கொரோனா பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 49 ஆயிரத்து 931 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்து 453ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4 லட்சத்து 85 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 9 லட்சத்து 17 ஆயிரத்து 568 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 32 ஆயிரத்து 771 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரத்து 799 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 606 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 96 ஆயிரத்து 298 பேரும், கர்நாடகத்தில் 96 ஆயிரத்து 141 பேரும், உத்தர பிரதேசத்தில் 66 ஆயிரத்து 988 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 58 ஆயிரத்து 718 பேரும், குஜராத்தில் 55 ஆயிரத்து 822 பேரும், தெலங்கானாவில் 54 ஆயிரத்து 59 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், பீகார், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Exit mobile version