திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 16 லட்சம் மதிப்பிலான 495 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 495 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த  நவாஸ் ஷெரிப், வைக்கல் கரணி ஆகியோரிடம் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில், 495 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Exit mobile version