கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 488 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து 488 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 488 கன அடியாக அதிகரித்துள்ளது.  முழுக்கொள்ளவான 44 புள்ளி 28 அடியில் 41 புள்ளி 82 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 488 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கெலவரப்பள்ளி அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Exit mobile version