தெலுங்கானாவில் 48,000 போக்குவரத்து ஊழியர்களை பணி நீக்கம்

தெலுங்கானாவில் 48ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, நீதிமன்றத்தை நாட உள்ளதாக ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதன் தொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நேற்றும் நீடித்த வேலைநிறுத்தத்தால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால், பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு, அரசு விதித்திருந்த காலக்கெடுவிற்குள், ஊழியர்கள் பணிக்கு திரும்பாததால், 48 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வதாக தெலங்கானா அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில் 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை நீக்கிய உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version