கோவையில் 45வது தமிழ்நாடு துப்பாக்கி சுடும் போட்டி

கோவை அண்ணாசாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் 45வது தமிழ்நாடு துப்பாக்கி சுடும் போட்டிகள் தொடங்கியது.

கோவை துப்பாக்கி கழகம் நடத்தி வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் 900க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மூன்று பிரிவுகளில் நடைபெறும் போட்டியை, மாவட்ட காவல் ஆணையர் சுமித் சரண் தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என வரும் 3ம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. போட்டியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version