சென்னையில் பதற்றமான 450 வாக்குபதிவு மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

சென்னையில் பதற்றமான 450 வாக்குபதிவு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து வாக்குசாவடிகளுக்கும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும்  2 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, 50க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version