43-வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 9ல் தொடக்கம்

சென்னை புத்தக கண்காட்சி, வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், மொத்தம் 700 அரங்குகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி, வருகிற ஜனவரி 9-ஆம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், 13 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில், 700 அரங்குகளில், 2 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், கல்வி நிறுவனங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகளும் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில், கீழடி- ஈரடி என்ற தலைப்பில், தொல்லியல் துறையின் ஒத்துழைப்போடு, பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 13 நாட்களும் புத்தகங்கள் வெளியீடு மற்றும் கலை உலகினர் பங்குபெறும் நிகழ்ச்சிகளும் அங்கு நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version