தமிழகத்தில் மேலும், 434 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் 40 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்த தமிழக தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை இல்லாத வகையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 359 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 906 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், 7 ஆயிரத்து 435 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் பலியானதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version