43 உயிரை பலிவாங்கிய கட்டிடத்தில் மீண்டும் தீ

டெல்லி தொழிற்சாலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்த நிலையில், அதே கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அதே கட்டடத்தில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version