டான்செட் நுழைவுத்தேர்வுக்கு 41,142 பேர் விண்ணப்பம்

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு மொத்தம் 41ஆயிரத்து 142 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எம்.பி.ஏ படிப்பிற்கு 21 ஆயிரத்து 340 பேரும், எம்.சி.ஏ.விற்கு 5 ஆயிரத்து 922 பேரும், எம்.இ,எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பிற்கு 13 ஆயிரத்து 880 பேரும் விண்ணப்பித்துள்ளனர். எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையிலும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version