தமிழக அரசைக் குறைகூறும் ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது-துணை முதல்வர்

தமிழக அரசைக் குறைகூறும் திமுக தலைவர் ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பல முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மதுரை பாப்பாபட்டியைச் சேர்ந்த பி.கே. மூக்கையாத்தேவரின் 40ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. உசிலம்பட்டிக்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியைக் கொண்டு வந்த பி.கே. மூக்கையாத்தேவர் கல்வித் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவரது நினைவு நாளை முன்னிட்டுத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மூக்கையாத் தேவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசைக் குறை கூறும் திமுக தலைவர் ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார்.

Exit mobile version