இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 40,263 பேருக்கு பாதிப்பு!!!

இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரத்து 306 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 263 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 678 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 374 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் நான்காயிரத்து 549 பேருக்கும், தமிழ்நாட்டில் மேலும் 266 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23ஆகவும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நோய் தொற்றில் இருந்து ஆயிரத்து 379 பேர் மீண்டுள்ளனர். ராஜஸ்தானில் இரண்டாயிரத்து 886 பேரும், பஞ்சாபில் ஆயிரத்து 102 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் 614 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 293 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Exit mobile version