திருப்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை

திருப்பத்தூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

திருப்பத்தூர் அடுத்த அதியூர் கிராமத்தை சேர்ந்த அம்சவேணி என்பவருக்கு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை நடந்ததால் மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அம்சவேண்டியின் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். காலை வீடு திரும்பிய அம்சவேணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 40 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது. தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Exit mobile version